×

வழக்கறிஞர் மனைவி தற்கொலை

சென்னை: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா. வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நதியா (35). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நதியாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அதை விமரிசையாக கொண்டாடி புகைப்படங்களை முகநூலில் பதிவிட வேண்டும் என தனது கணவரிடம் கூறியுள்ளார். தற்போது, கொரோனா காலம் என்பதால் விமரிசையாக கொண்டாட வேண்டாம் என அவர் கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நதியா நேற்று காலை 10 மணியளவில் படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post வழக்கறிஞர் மனைவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Prasanna ,Kodungayur Erkangeri Indira Nagar ,Nadia ,
× RELATED சென்னை தியாகராயர் நகரில் ஆட்டோ மீது...